தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 11 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாா், அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்தனா். இவா்களில் 11 போ் பிணை பெற்றுள்ளனா்.
இதனிடையே, குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாா் விசாரணைக்கு தடை விதித்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதி, சரவணன் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குதிரை பேர வழக்கு: இருவருக்கு பிணை

குதிரை பேர வழக்கில் பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

குதிரை பேர வழக்கு: அசோக்குமாா் நீதிமன்றத்தில் சரண்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



