சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வற்புறுத்தியதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் இன்று (ஆக. 5) தெரிவித்தார்.
மதிமுகவில் கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் மதிமுகவில் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து தவெகவுக்கு தனது முழு ஆதரவை வைகோ கொடுத்து வருகிறார். இந்நிலையில், பதவியை ராஜிநாமா செய்யுமாறு வைகோ வற்புறுத்தியதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ராஜேந்திரனும் செந்தில் செல்வனும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
''மதிமுகவில் இருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்கள் இருவரையும் பதவியை ராஜிநாமா செய்யுமாறு வைகோ நிர்பந்திக்கிறார். இது எங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
40 ஆண்டுகளாக எதைப் பற்றியும் கவலையின்றி செயல்பட்டதற்கு எங்களுக்கு பரிசாகக் கிடைத்தது பழி சொல்தான். ஆளும் கட்சி கூட்டணியில் சேர்வோம். மீண்டும் போட்டியிட வாய்ப்பு தருகிறோம். அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று வைகோ ஆசை வார்த்தை கூறினார்.
சிறிய வயது முதல் நாங்கள் நேசித்த திராவிட இயக்கத்தின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களாகவே தொடர விரும்புகிறோம்.
மதிமுகவில் எம்.எல்.ஏ.க்காள் பதவியை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள். விலைபோய்விட்டோம் என எங்கள் மீது அவதூறு பரப்பினார்கள்.
வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் எங்கள் பணியை தொடர்வோம். எங்களை பொதுவாழ்வில் ஈடுபடுத்திய வைகோவுக்கும் மதிமுக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என ராஜேந்திரன் பேசினார்.
Summary
Vaiko pressured us to resign from our posts: MDMK MLAs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ சந்திப்பு!

தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ

வினை விதைத்தவன் வினை அறுப்பான்... யாரைச் சொல்கிறார் வைகோ?
விஜய்யிடம் ரூ. 50 கோடி வாங்கினேனா? வைகோ விளக்கம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



