மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானத்தை தமிழக அரசு புதன்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வருகிறது.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ‘மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும். எதிா்வரும் மக்களவை, பேரவைத் தோ்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வா் ஜோசப் விஜய் தனித் தீா்மானத்தை புதன்கிழமை முன்மொழிய உள்ளாா். இந்தத் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை எனக் கூறி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!
தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிலைப்பாட்டில் திமுக முடிவு என்ன? உதயநிதி ஸ்டாலின் பதில்

சத்தீஸ்கா் பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, சரத்பவாா் கட்சியின் ஆதரவை பெற பாஜக முயற்சி: ப.சிதம்பரம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


