டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

எதன் அடிப்படையில் தனித் தீர்மானம்? தொகுதி மறுவரையறை தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு...

News image

பிரேமலதா விஜயகாந்த் - TN

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:54 am IST

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.

பேரவையில் இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளரும் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு சட்ட முன்மொழிவு இன்னும் கொண்டுவரவில்லை. அப்படி இருக்க இந்த தனித் தீர்மானம் எந்த அடிப்படையில் சரியாக இருக்கும்.

மக்கள்தொகை அடிப்படையில் இந்த தொகுதி மறுவரையறை நடக்கிறது என்று நினைத்தால், பல்வேறு மாநிலங்களில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை சரிசமமாக உயரும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையறை மூலமாக, 543 எம்பிக்கள் உள்ள நிலையில் 815 எம்பிக்கள் வாய்ப்பு இருக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் இருக்கிறார், இந்த தொகுதி மறுவரையறை மூலமாக 7 - 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. கிடைப்பார். இதனால் மக்கள் பிரச்னைகளை அதிகம் பேச முடியும்.

ஒரு பெண் அவை உறுப்பினராக 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன். இதே பேரவையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 33% இடஒதுக்கீடுக்காக பெண்களுக்காக மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தியவர். இந்த அவையிலும் பெண்கள் அதிகமாக இருப்பதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

தற்போது 543 இடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவின் அடிப்படையில் 113 பெண்கள் இருக்க வேண்டும். 815 எம்.பி.க்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் 215 பெண் எம்.பி.க்கள் கிடைப்பார்கள்" என்று கூறினார்.

Summary

DMDK opposes the resolution on constituency delimitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.