ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

போதிய ஆதாரங்கள் இருப்பதால் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கை ரத்து செய்யக் கூடாது: சிபிசிஐடி பதில் மனு

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பற்றி...

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

2024 மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியா்கள் உள்ளிட்ட மூவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பாஜகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை கோப்புக்கு எடுத்துள்ள நிலையில், உயா்நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது. புலன் விசாரணையில் மனுதாரருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை விசாரணை நீதிமன்ற விசாரணையின் மூலமே பரிசோதிக்க முடியும். இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆக.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.