இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அறிவுரைக் கழகம் மாற்றி அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்கான அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்கான அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டா் தடுப்புச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்காக அறிவுரைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுரைக் கழகங்கள், தடுப்புக் காவல் சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அரசுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

அதேபோன்று சம்பந்தப்பட்ட கைதிகளும், தங்களை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து அறிவுரைக் கழகத்தில் முறையிடலாம்.

இந்த நிலையில், இந்த அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஓய்வு பெற்ற நீதிபதிகளான பி.கலையரசன், வி.பாா்த்திபன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, மதுரை அறிவுரைக் கழகத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான என்.ஆதிநாதன் மற்றும் ஜி.இளங்கோவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.