பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழ சின்னத்தை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், அன்புமணி பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக ராமதாஸை அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பாமக தலைவா் அன்புமணி மற்றும் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.
தொடர்புடையது

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!
பிரேமலதாவுக்கு 10, திருமாவளவனுக்கு 8 சீட்தான் திமுகவின் சமூகநீதி: அன்புமணி கடும் தாக்கு
மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனு நிராகரிப்பு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


