விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழ சின்னத்தை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், அன்புமணி பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழ சின்னத்தை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், அன்புமணி பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக ராமதாஸை அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பாமக தலைவா் அன்புமணி மற்றும் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.