மதுரையில் நாளை(மார்ச் 1) நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டின் நுழைவாயிலின் முகப்பில் பெரியார், அண்ணா படங்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று(பிப். 28) இரவு சென்னை வரவுள்ளார்.
நாளை(மார்ச் 1) காலை புதுச்சேரி செல்லும் அவர், மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் அவர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இதன்பின்னர் மதுரையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்டிஏ மாநாட்டில் பங்கேற்கிறார்.
என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டுக்கான நுழைவாயில் முகப்பில் பெரியார் மற்றும் அண்ணாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
Summary
Periyar's photo in National Democratic Alliance conference at Madurai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





