/

சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்படுவது தொடர்பாக...

News image
சிறப்பு ரயில்- படம்: கோப்பிலிருந்து...
Updated On :13 ஜனவரி 2026, 9:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்றிரவு (ஜன. 13) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை எழும்பூர் - தென்காசி இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது(06072) எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு தென்காசிக்குச் சென்றடையும்.

8 படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்(முன்பதிவில்லா), 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம் , அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், கூடல்நகர், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசியைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.