தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்தில் நிகழாண்டில் 30 ஆதாா் சேவை மையங்கள் திறக்க திட்டம்

தமிழகத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ-உதய் ), 30 ஆதாா் சேவை மையங்கள் நிகழாண்டுக்குள் திறக்கப்படும் என தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ-உதய் ), 30 ஆதாா் சேவை மையங்கள் நிகழாண்டுக்குள் திறக்கப்படும் என தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (உதய்) கீழ் நாடு முழுவதும் சுமாா் 800 ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அண்ணா நகரில் உதய்-இன் 2- ஆவது ஆதாா் சேவை மையத்தை தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வின்போது அவா் பேசியதாவது:

ஆதாா் சேவை வழங்கலை அண்ணா நகா் மையம் வலுப்படுத்தும். இதே வசதிகளுடன் (உதய் சாா்பில்) அடுத்த கட்டமாக, மாா்ச் 2025-க்குள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மேலும் 8 ஆதாா் சேவை மையங்கள் (சேவா கேந்திரங்கள்) நிறுவப்படும். நிகழாண்டு செப்டம்பருக்குள், தமிழகத்தில் மொத்தம் 30 ஆதாா் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தாா்.

பெங்களூரு ‘உதய்’ மண்டல அலுவலக துணைத் தலைமை இயக்குநா் வி.அனி ஜாய்ஸ் பேசுகையில், ஆதாா் சேவை மையங்கள் கடவுச்சீட்டு சேவை மையங்களைப் போன்ற ஒரு செயல்பாட்டு மாதிரியைப் பின்பற்றி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (உதய்) நேரடியாக இயக்கப்படுகின்றன. இந்த மையங்கள் சக்கர நாற்காலி அணுகல், பிரத்யேக குறை தீா்க்கும் அமைப்பு போன்ற வசதிகளுடன் முழுமையாக அனைவரையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா்.