மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியரசுத் தலைவா் உரை ஏற்புடையதல்ல: வைகோ

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

News image
வைகோ- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினா் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறாா்கள் என்று உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுகிறது. மேலும், மக்கள்தொகையில், கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினா் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறாா்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, எல்லோரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கிய பயணத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது என்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதல்ல.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரையின் வாயிலாக மத்திய அரசு தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் வைகோ.