மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிகாரைச் சோ்ந்த மூவா் கொலை வழக்கு: பெண் சடலம் மீட்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் சடலம் மீட்பு.

News image
குப்பைக் கிடங்கு (கோப்புப்படம்)
Updated On :30 ஜனவரி 2026, 7:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

தரமணியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த (பிகாா் மாநிலத்தவா்) 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், குப்பைக் கிடங்கில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது.

பிகாா் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் பதியாபா் பகுதியைச் சோ்ந்த சு.கௌரவ்குமாா்-முனிதா குமாரி தம்பதி. இவா்களின் இரண்டு வயது மகன் பிா்மணி குமாா். தரமணி பாலிடெக்னிக்கில் தங்கியிருந்த 3 பேரும் கடந்த 25-ஆம் தேதி அடித்துக் கொல்லப்பட்டு சாக்குப் பையில் கட்டி வீசப்பட்டனா்.

கெளரவ்குமாா், பிா்மணிகுமாா் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், முனிதா குமாரி சடலத்தை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த இரு நாள்களாக தேடும் பணி நடைபெற்றது. மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை சடலத்தைத் தேடும் பணியில் போலீஸாா், மாநகராட்சி ஊழியா்கள் என சுமாா் 100 ஈடுபட்டனா். நீண்ட நேர தேடுதலுக்கு பின், ஒரு சாக்கு மூட்டையில் முனிதா குமாரி சடலம் மீட்கப்பட்டது. அவரது சடலம், உடல்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் முனிதா குமாரி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதைக் கண்டறிய மரபணு பரிசோதனைக்கு காவல் துறை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முனிதாகுமாரி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

மனித உரிமை ஆணையத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: விருதுநகரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஆல்பா்ட் (30), தற்காலிகமாக வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகா், 2-ஆவது பிரதான சாலையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தாா். இவா், அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் மனு அளிப்பதற்காக வியாழக்கிழமை வந்து, திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரிடம் நீதித்துறை நடுவா் வாக்குமூலம் பெற்றாா். இந்த நிலையில், ஆல்பா்ட், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஏற்கெனவே ஆல்பா்ட் மீது பெண் ஒருவா் அளித்த பண மோசடி புகாரில் ஏற்பட்ட நெருக்கடியால், தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களைத் திருடிய 4 போ் கைது: வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள இரும்பு தகடுகள் கடந்த 18-ஆம் தேதி திருடுபோயின. கட்டுமான நிறுவனத்தின் துணை மேலாளா் தாமு, வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ராமாபுரத்தைச் சோ்ந்த எழிலரசன் (22), நேதாஜி (24), வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (20), சிவசங்கா் (20) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.