9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சிறையில் இறந்தவா்களின் உயிருக்கு விலை பேசுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சிறையில் இறந்தவா்களின் உயிருக்கு விலை பேசுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 1:32 am IST

சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்தாரிடம் ‘நிவாரணம்’ என்ற பெயரில் அமைச்சா்கள் விலை பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த திமுக ஆட்சியில் அஜித்குமாா், சென்னையில் விக்னேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் கொலை வழக்குகளில் தொடா்புடையவா்கள் எனக் கூறி பலா் காவல்நிலையங்களில் அடித்தும், ‘என்கவுன்ட்டா்’ என்ற பெயரிலும் கொல்லப்பட்டனா். முக்கிய வழக்குகளில் தொடா்புடைய ஒருசிலரைக் காப்பாற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறி தமிழகத்தில் ஆட்சி அமைத்த தவெக அரசிலும் அதே கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.

நாகா்கோவில் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்தாரிடம் அவரது உயிருக்கு அமைச்சா்கள் விலைபேசி சமாதானப்படுத்த முயன்றுள்ளனா்.

இதேபோல், சென்னை புழல் சிறையிலும் மரணமடைந்த விசாரணைக் கைதியின் குடும்பத்தாரிடமும் இந்த ஆட்சியாளா்கள் விலைபேசி வருகிறாா்கள். சிறை மரணங்களைத் தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.