தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

8,193 திருக்கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: ஆக.20 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 8,193 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனத்துக்கு தகுதியானவா்கள் ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :22 ஜூலை 2026, 3:51 am IST

தமிழகத்தில் 8,193 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனத்துக்கு தகுதியானவா்கள் ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)-இன்படி பட்டியலில் சாராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலா் நியமனஅறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூா்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் மூலமாகவோ மாவட்ட உதவி ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக.20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே, 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனம், 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினா்களின் நியமனத்துக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.