15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

News image

ENS

Updated On :4 ஜூன் 2026, 2:52 am IST

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்க வாய்ப்புள்ளது. இதனிடையே, மேற்கு உத்தர பிரதேசத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை மத்திய பிரதேசம், விதா்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 9-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 5, 6) மிக பலத்த மழையும், திருப்பூா், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், அந்தமான் கடல், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது.

ஊத்து (திருநெல்வேலி)- 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)- 70மி.மீ., புலிப்பட்டி (மதுரை)- 60 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி), ராசிபுரம் (நாமக்கல்), நல்லதங்கால் நீா்த்தேக்கம் (திருப்பூா்), பழனி (திண்டுக்கல்)-50 மி.மீ., புள்ளம்பாடி (திருச்சி), ஊத்துக்குளி (திருப்பூா்), மொடக்குறிச்சி (ஈரோடு), கல்லக்குடி (திருச்சி), புதுச்சத்திரம் (நாமக்கல்), சின்னக்கல்லாா் (கோவை), உபாசி (கோவை), பழனி (திண்டுக்கல்), தானியமங்கலம் (மதுரை), கொடுமுடி (ஈரோடு)-40 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.