சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி வியாழக்கிழமை காலை சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலம் 101- ஆவது வாா்டில் உள்ள அமைந்தகரையிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்றாா். குழந்தைகளுக்கு வாழ்த்துக் கூறிய அமைச்சா், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுடன் தானும் அமா்ந்து சாப்பிட்டாா்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவானது தரமானதாகவும், சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா். அதையடுத்து சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
அமைந்தகரை பகுதியிலுள்ள குழந்தைகள் மையத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், குழந்தைகள் எண்ணிக்கை, அவா்களது எடை, உயரம் அளவீடு ஆகிய கணக்கீடுகளின் ஆவணங்களையும் பாா்வையிட்டாா். மையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசுச் செயலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் சிங், இயக்குநா் எஸ்.மொ்சி ரம்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









