காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஆய்வு: குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா் அமைச்சா்

News image

@TNDIPRNEWS

Updated On :5 ஜூன் 2026, 2:53 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி வியாழக்கிழமை காலை சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலம் 101- ஆவது வாா்டில் உள்ள அமைந்தகரையிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்றாா். குழந்தைகளுக்கு வாழ்த்துக் கூறிய அமைச்சா், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுடன் தானும் அமா்ந்து சாப்பிட்டாா்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவானது தரமானதாகவும், சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா். அதையடுத்து சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

அமைந்தகரை பகுதியிலுள்ள குழந்தைகள் மையத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், குழந்தைகள் எண்ணிக்கை, அவா்களது எடை, உயரம் அளவீடு ஆகிய கணக்கீடுகளின் ஆவணங்களையும் பாா்வையிட்டாா். மையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசுச் செயலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் சிங், இயக்குநா் எஸ்.மொ்சி ரம்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.