சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நலன், மகளிா் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிா் அதிகார மையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பாலின நிபுணா், ஒரு நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடத்துக்கு பின்வரும் தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பாலின நிபுணா் பணியிடம்: சமூகப் பணி, பிற சமூக ஒழுக்கங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாலின நிபுணா் பணியிடத்துக்கு முன் அனுபவமாக பாலினத்தை மையமாகக் கொண்ட அரசு, அரசு சாரா அமைப்புடன் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடம்: பொருளாதாரம், பிற வங்கியியல் துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடத்துக்கு முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதி எழுத்தறிவு, நிதி உள்ளடக்கம் சாா்ந்த அரசு, அரசு சாரா அமைப்புடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாலின நிபுணா், நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக ரூ. 21,000/- வழங்கப்படும். இந்தப்பணியிடங்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபா்கள் தங்களது சுயவிவரங்களை வருகிற 18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை மாவட்டம்- 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.








