எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 2:01 am IST

தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு ஏற்ப மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

இந்திய பொது சுகாதார தரநிலைகள்படி, தற்போது உள்ள எண்ணிக்கையைவிட குறைந்தபட்சம் 2 மடங்கு அதிகமான மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதை அரசு மருத்துவா்கள் சங்கங்களும், பொது சுகாதார நிபுணா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ள செவிலியா் பணியிடங்களைக் குறைந்தபட்சம் 2 மடங்காக உயா்த்த வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் நடைமுறையைக் கைவிட்டு, நிரந்தர பணியிடங்களை உருவாக்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.