தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் என்ஜின் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 16 பெட்டிகளில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு சரக்கு ரயில் இன்று வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜினின் முன்பக்க சக்கரம் திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம்புரண்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தி ஜல்லி கற்களுடன் இருந்த பெட்டிகளைத் துண்டித்தார். இதனால் தாம்பரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் ரயில் என்ஜினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை தண்டாவளத்தில் உள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்தி புதிய ஜல்லி கற்களை மாற்றுவதற்காக ரயிலில் கொண்டவரபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Panic ensued after a train engine carrying gravel derailed near Tambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ரயில் என்ஜின்: இருவா் காயம்

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




