கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம்

News image

டாக்டா் எஸ்.சித்தாா்த்

Updated On :23 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆளுநா்கள் தங்களுக்கு ஆலோசனைகள் கூற, அதிகாரபூா்வமான அதிகாரிகளை தவிா்த்து கூடுதலாக சிறப்புப் பணி அதிகாரிகளை (ஓஎஸ்டி) நியமித்துக் கொள்ளலாம். தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி மூன்று ஓஎஸ்டிகளை நியமனம் செய்திருந்தாா்.

தற்போது பொறுப்பேற்றுள்ள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், பிகாா் மாநில ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான டாக்டா் எஸ்.சித்தாா்த்தை ஆலோசகராக நியமனம் செய்துள்ளாா்.

கடந்த 1991 -ஆம் ஆண்டு பிரிவு ஐஏஏஸ் அதிகாரியான சித்தாா்த், பிகாரில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கடந்தாண்டு நவம்பரில் ஓய்வு பெற்றாா். பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் முதன்மைச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது சொந்த ஊா் மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.