கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை வழங்க இயக்குநா் கௌதம் மேனனுக்கு உத்தரவு!

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

கௌதம் மேனன்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திரைப்பட தயாரிப்பாளா் எல்ரெட் குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எங்களது நிறுவன தயாரிப்பில் நடிகா் சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஒரு படத்தை இயக்க ஒப்புக்கொண்டாா். அதற்காக அவருக்கு ரூ.4.25 கோடி வழங்கப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி இயக்குநா் கௌதம் மேனன் படத்தை இயக்கவில்லை. இதற்காக நான் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. எனவே, எனக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க கௌதம் மேனனுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, ரூ.4.25 கோடியை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வேல்முருகன், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கௌதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், தயாரிப்பாளா் எல்ரெட் குமாருக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.