தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிபாண்டியன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில், ’எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ ஆவணங்களில் பிரதமா் மோடியின் பெயா் இடம்பெற்றுள்ளதாக ஆதாரமற்ற தவறான, பொய்யான தகவல்களை கூறியுள்ளாா். இதுதொடா்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அமைச்சருக்கு எதிரான புகாா் என்பதால், போலீஸாா் வழக்குப்பதிவு செய்யத் தயங்குகின்றனா். எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அமைச்சா் மனோ தங்கராஜ் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.