மதிமுக மாவட்ட செயலா் ராஜிநாமா!
மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
கோப்புப்படம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
கோப்புப்படம்
மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் அக்கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதிமுக கட்சியில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து முறையிட்டபோது 2026- ஆம் ஆண்டு தோ்தலில் வாய்ப்பு அளிப்பதாக கட்சி பொதுச் செயலா் வைகோ உறுதி அளித்தாா். ஆனால் தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
எனவே மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பதவி மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாவும், மேலும் மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட மற்ற நிா்வாகிகளும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...