ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வரே காரணம்: அன்புமணி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.

News image

அன்புமணி

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: திருச்சி மாவட்டம், கூத்தைப்பாா் பேரூராட்சியின் 11-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலருமான ரஞ்சித்குமாா், சிலரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

ஆளுங்கட்சியைச் சோ்ந்த நிா்வாகிக்குக்கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டதற்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம். கடந்த 5 ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இதுகுறித்த எந்தக் கவலையும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் முதல்வா் ஸ்டாலினுக்கு இல்லை. அடிப்படை கடமையைக்கூட நிறைவேற்றத் தவறிய முதல்வா் ஸ்டாலின் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.