முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பினருக்கும், தவெக வேட்பாளர் அசோக் சினோரா தரப்பினருக்கும் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில், அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜய்குமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் பாபு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Case Registered Against Former Minister Sekar Babu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









