மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

செவிலியர் மாணவி பலி: திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள், சக மாணவிகள் சாலை மறியல்

செவிலியர் மாணவி பலியான விவகாரத்தில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள், சக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

News image

பலியான மாணவி சீதாலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்டோர்.

Updated On :23 மே 2026, 6:55 pm IST

செவிலியர் மாணவி பலியான விவகாரத்தில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள், சக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு - கலைச்செல்வி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் சீதாலட்சுமி (20). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளது. இதற்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினர். இதனையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அதிகளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் பலியானதாகக் கூறப்படுகிறது. மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி பலியானதாக குற்றம்சாட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாணவியின் உறவினர்கள், சக மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பேட்டியில், செவிலியர் மாணவி பலியான சம்பவத்தில் உண்மையைக் கண்டறிய நான்குபேர் கொண்ட குழுவை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஓரிரு நாளில் அறிக்கை தர வலியுறுத்தியுள்ளோம்.

இந்த பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.

Summary

Tension prevailed outside the Trichy Government Hospital as relatives and fellow students staged a road blockade following the death of a nursing student.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.