போராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவு! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரங்கல்!

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்...

News image

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி - கோப்புப் படம் | Instagram

Updated On :23 மே 2026, 5:41 pm IST

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் நா.மா. முத்துக்கூத்தனின் மகனும், பொம்மலாட்டக் கலைஞருமான மு. கலைவாணன் சென்னையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) இரவு காலமானார்.

கலைமாமணி விருது பெற்ற மு. கலைவாணன், 6000-க்கும் அதிகமான இடங்களில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பியவராக அறியப்படுகிறது. அவரது மறைவுக்குப் பல்வேறு முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மு. கலைவாணனின் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“பொம்மலாட்டக் கலை மூலம் இளையத் தலைமுறையினரிடையே முற்போக்கு கருத்துக்களைப் பரப்பிய பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் அவர்களுடைய மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

கலைவாணன் அவர்களது கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய இயக்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin has expressed his condolences on the passing of puppetry artist M. Kalaivanan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.