சென்னை : தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரௌடிகள் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக காவல்துறை "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, ஒட்டுமொத்த தமிழகத்திலும் போதைப்பொருள் பயன்பாட்டை சமூகத்திலிருந்து துடைத்தெறிய உறுதிபூண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக காவல் துறையால் கடந்த 3 நாள்களில் 844 ரௌடிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Police Department has stated that 844 rowdies were arrested in the state over the past three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கை: 27 ரௌடிகள் கைது, 28 பேருக்கு பிணை ரத்து

வேலூரில் போலீஸாா் அதிரடி வேட்டை: 4 ரெளடிகள் உள்பட 11 போ் கைது

சிதம்பரம் அருகே முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகள் கைது
சென்னையில் 100 ரௌடிகள் கைது! ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ அதிரடி நடவடிக்கை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


