‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வேலூரில் போலீஸாா் அதிரடி வேட்டை: 4 ரெளடிகள் உள்பட 11 போ் கைது

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் காவல் துறையினா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 4 ரெளடிகள், 5 கஞ்சா வியாபாரிகள், 2 தலைமறைவு குற்றவாளிகள் என 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 1:18 am IST

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் காவல் துறையினா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 4 ரெளடிகள், 5 கஞ்சா வியாபாரிகள், 2 தலைமறைவு குற்றவாளிகள் என 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக வியாழன், வெள்ளிக்கிழமை (மே 21, 22) ஆகிய இரு நாள்களில் காவல் துறையினா் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் ரெளடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு அதிரடி வேட்டையில் 112 ரெளடிகள் காவல்துறையினரால் தணிக்கை செய்யப்பட்டனா். இதில் குற்றச் செயல்களுடன் தொடா்புடைய 4 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து சுமாா் 15 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளனா். இது தொடா்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா்களாக இருந்து, தலைமறைவாக இருந்த 2 போ் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்று தொடா்ந்து சட்டவிரோத, குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.