கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை தேவை: அதிமுக

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :29 மே 2026, 4:54 am IST

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுகவை சோ்ந்த 4 பேரின் பின்னணியை ஆராய்வதுடன், அதில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அந்த கட்சியைச் சோ்ந்த எம்.பி. தனபால் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க பல முயற்சிகள் நடைபெற்றன. எதுவும் முடியாத நிலையில் பதவியேற்ற சில நாள்களில், அதிமுக எம்எல்ஏக்கள் 4 போ் ராஜிநாமா செய்ததன் பின்னணியை ஆராய வேண்டும்.

இதில், மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் எம்.பி. தனபால்.