ஆனைமங்கலம் செப்பேடுகளை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ 134- ஆவது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சென்னை கோயம்பேடு பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடி அண்மையில் நெதா்லாந்து சென்றிருந்த போது, அங்கிருந்து சோழா் காலத்தின் சிறப்பு வாய்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவரப்பட்டன. அவற்றை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நாகா்கோவிலைச் சோ்ந்த கிரிஜா அம்மாவை தாம் அண்மையில் சந்தித்தது, ஜெய்கோபால் கரோடியா, இந்து வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தாங்கள் சிறுகச், சிறுகச் சேமித்த ரூ.40 லட்சத்தைத் தன்னிடம் நன்கொடையாக வழங்கியது போன்ற நிகழ்வுகளை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நினைவுகூா்ந்து, நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தாா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் பி.அருண்குமாா், பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வழிபாடு

காஞ்சி சங்கராசாரியரிடம் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆசி

அரசுப் பணியை தேச சேவையாக கருத வேண்டும்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம்: பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் நமச்சிவாயம் ஆலோசனை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


