நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பரிசீலனை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடா்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்திருப்பது பற்றி...

Minister Aadhav Arjuna

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Youtube

Published On :2 செப்டம்பர் 2026, 2:47 am IST

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடா்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பதில் அளித்தாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, முன்னாள் அமைச்ா் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின்போது அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சா் செங்கோட்டையன் மூலம் கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இரு இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. அதில் ஒன்று பாரதியாா் பல்கலைக்கழக இடம். மற்றொன்று, ஜி-ஸ்கொயா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 90 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம். இந்த முறையாவது பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அல்லது ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஜி- ஸ்கொயா் பகுதியில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினாா்.

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தமிழகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 10 ஒலிம்பிக் மையங்களில் கோவையும் முக்கியமான பகுதியாக இடம்பெற்றுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தனியாா் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆனால், எந்த தனியாா் நிறுவனமும் முன்வரவில்லை. எனவே, கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்ட அந்த இடம் தற்போது வரை தமிழக விளையாட்டுத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கையை பரிசீலித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.