சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சென்னை விமான நிலைய முதல் முனையத்தில் புதிய வசதி! செப்டம்பர் இறுதியில்

சென்னை விமான நிலைய முதல் முனையத்தில் வாடகைக் கார்களில் ஏறிச் செல்லும் கூடம் திறக்கப்படவிருப்பது பற்றி..

13/08/2026,TN,CHENNAI: STANDALONE/ Chennai International Airport is illuminated in the colours of the Tricolour ahead of Independence Day celebrations

சென்னை விமான நிலையம் - ENS

Published On :3 செப்டம்பர் 2026, 2:54 pm IST

சென்னை விமான நிலையத்தின் முதல் முனையத்திலிருந்து வெளியேறும் பயணிகள், அதன் நுழைவு வாயிலில் இருந்தே வாடகை வாகனங்களில் ஏறிச் செல்லும் வசதி விரைவில் கொண்டுவரப்படவிருக்கிறது.

சென்னை விமான நிலையத்துக்குள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது முதல் முனையத்திலிருந்து வெளியறும் பயணிகள், சொந்த வாகனமாக இருந்தால் அங்கேயே ஏறிக் கொள்ள முடியும். ஆனால், செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே வந்து அதற்குரிய இடத்தில் மட்டுமே ஏற முடியும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை அடைந்து வந்தனர்.

இதற்கான வாகனக் கூடம் ஒன்று உருவாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், முதல் முனையத்துக்கு அருகேயே, பயணிகள் வாடகை வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் இந்த முனையத்திலிருந்து சுமார் 33 ஆயிரம் பேர் வெளியே வருகிறார்கள். இதில் குறைந்தது 10 ஆயிரம் பயணிகளாவது வாடகை வாகனங்களில்தான் வெளியேறுவார்கள். இவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனக் கூடமானது ரூ.28 கோடிச் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கூடம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், முதல் முனையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் நேராக இங்கிருந்து வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.