சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்...

முதல்வர் விஜய் - DIPR
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ்நாடு வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்" என்று தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசினார்.
தொடர்ந்து திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
மேலும் 2018க்குப் பிறகு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் 2018க்குப் பிறகு தற்போதுதான் இதுதொடர்பான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Summary
Tamil to be the primary language in the Madras High Court: Resolution passed in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






