FOLLOW US

ON GOOGLE DISCOVER

10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

இது எங்கள் குழந்தை; தீர்மானத்தை வரவேற்கிறோம்; இந்த முயற்சியாவது வெற்றி பெறட்டும்! ரகுபதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் தீர்மானத்தின் மீது திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியது பற்றி...

we welcome the resolution; let this effort at least succeed: Raghupathi

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி - tn assembly

Published On :3 செப்டம்பர் 2026, 11:59 am IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் முடிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

இதுபற்றி பேசிய ரகுபதி, "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர 2006லேயே தீர்மானம் கொண்டு வந்தோம். இதுவரை இரண்டு முறை பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அடங்கிய தரவுகள் இருந்தால் அதனை அங்கீகரிக்கிறோம் என்று சொன்னார்கள்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் முடிவு தடுக்கப்பட்டதே தவிர மறுக்கப்படவில்லை. இதற்காக பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக நேரடியாக கோரிக்கை வைத்தார்.

2022 சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் நேரடியாக இதுபற்றி பேசினார் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் வரிகளையே தற்போதைய முதல்வர் மீண்டும் முன்மொழிந்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்தவர் ஸ்டாலின்தான்.

இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்கு முன்னதாக வரலாறு முக்கியம், வரலாறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது. 2006 முதல் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுடைய குழந்தையை நாங்கள் வரவேற்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய தாய்மொழி எங்கும் ஒலிக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கனவு.

ஏனெனில் சட்டம் படித்தவர்கள்தான் நீதிமன்ற வழக்குகளை புரிந்துகொள்ள முடியும். இந்த முயற்சியாவது வெற்றி பெறட்டும்.

சட்டத்தில் உள்ள சொற்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால்தான் அனுமதி கிடைக்கும். ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலங்களில் அனைத்தும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுத்த முயற்சியை நீங்களும் எடுத்திருக்கிறீர்கள். அதனை வரவேற்கிறோம்" என்றார்.

Summary

we welcome the resolution; let this effort at least succeed: Raghupathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.