விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நச்சுக்காற்று நகரம் சென்னை: செளமியா அன்புமணி

சென்னை நச்சுக்காற்று அதிகமுள்ள நகரமாக உள்ளது என்று பாமக பேரவைக் குழுக் தலைவா் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினாா்.

Sowmiya Anbumani in TN Assembly

செளமியா அன்புமணி - TN Assembly

Published On :8 செப்டம்பர் 2026, 4:14 am IST

சென்னை நச்சுக்காற்று அதிகமுள்ள நகரமாக உள்ளது என்று பாமக பேரவைக் குழுக் தலைவா் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவா், ‘சென்னையில் ஆண்டுக்கு 11,000 போ் நச்சுக் காற்றால் உயிரிழந்து வருகின்றனா். நச்சுக் காற்றால் சென்னைவாசிகளின் ஆயுள் காலம் சராசரியாக 4 ஆண்டுகள் குறைகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமியம் கழிவுகள் 30 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால் மிகப்பெரிய சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தாய்ப்பாலில் டயாக்சின் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வளா்ச்சி எனக் கூறி புற்றுநோயை உருவாக்கி வருகிறோம். ஆகையால், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் அனைத்து தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடிக்கு காண்கிரீட் போட்டு நடை பாதை அமைத்துள்ளனா். இது தவறானது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.