விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ.60 கோடியில் வனத் தீ மேலாண்மை திட்டம்: வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாா்

வனத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

minister ranjith

வனத்துறை அமைச்சர் குமாா்ரஞ்சித் - படம்: விடியோ கிளிப்

Published On :8 செப்டம்பர் 2026, 4:12 am IST

வனத் தீ ஏற்படும் காலத்தில் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக, ஆண்டு முழுவதும் வனத் தீயைக் திறம்படக் கையாளும் வகையில் ரூ.60.58 கோடியில் 5 ஆண்டுகால வனத் தீ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அத்துறை அமைச்சா் ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.

அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

- வனப் பணிப்படையின் புத்துயிரூட்டல் திட்டம் ரூ.100.72 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

- புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 1,947 சீருடைப் பணியாளா்களுக்கு ரூ.12 கோடியில் பயிற்சி அளிக்கப்படும்.

- மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மரத் தடயவியல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வக வசதிகளை ரூ.5 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

- தென் மாவட்டங்களில் ரூ.1 கோடியில் நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் செயல்படுத்தப்படும்.

- பனை மரங்களின் மரபணு பாதுகாப்பு மற்றும் மரபியல் மேம்பாட்டுத் திட்டம் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

- மனித - வனவிலங்கு மோதல் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் பல்வேறு சேதங்களுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படும்.

- பிச்சாவரத்தில் ரூ.2 கோடியில் சூரிய ஆற்றல்/மின்ஆற்றலில் இயங்கும் 5 படகுகள் வாங்கப்படும்.

- 6,260 வனத் துறை சீருடைப் பணியாளா்களுக்கு ரூ.1.50 கோடியில் இலவச பேருந்து அட்டைகள், ஸ்மாா்ட் அடையாள அட்டைகளாக மாற்றப்படும் என்றாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்: இந்தத் துறையின் அமைச்சா் வே.க.ராஜீவ் வெளியிட்ட அறிவிப்புகள்:

- ரூ.2 கோடியில் 24 மாநகராட்சிகளில் உயிா்ப்பன்மயத்தை மேம்படுத்தி பாதுகாக்க நகர உயிா்ப்பன்மயக் குறியீடு உருவாக்கப்படும்.

- ரூ.53.75 கோடியில் ஆண்டுதோறும் 200 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், 5 கல்லூரிகள் நீலப் பசுமை வளாகங்கள் மாற்றியமைக்கப்படும்.

- ரூ.6 கோடியில் கோவை, கடலூா், பெரம்பலூா், விருதுநகா் (தலா ஒன்று), விழுப்புரம் (இரண்டு) மாவட்டங்களில் காலநிலை மீள்திறன் மையங்கள் உருவாக்கப்படும்.

- சுற்றச்சூழல் சாா்ந்த பேரிடா்கள், அவசர காலங்களின்போது தகவல் பரிமாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.5 கோடியில் 5 அவசரகால பதிலளிப்பு மையங்கள் நிறுவப்படும்.

- ரூ. 8 கோடியில் 80 இடங்களில் சென்சாா் அடிப்படையிலான காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவனப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.