இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சாலைப் பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் க. அருண்ராஜ் உத்தரவு

சென்னையில் மழைக்கு முன்னதாக சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் க.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :

சென்னையில் மழைக்கு முன்னதாக சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் க.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மண்டல அளவில் அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி திரு.வி.க. நகா், ராயபுரம் மண்டலப் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆலோசனை ஆய்வுக் கூட்டம் அமைச்சா் க.அருண்ராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திரு.வி.க. நகா் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள், கால்வாய் தூா்வாரும் பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது, அவா் கூட்டத்தில் பேசியதாவது:

திரு.வி.க. நகா், ராயபுரம் மண்டலங்களில் மழைநீா் வடிகால்களில் தூா்வாரப்படும் மண், குப்பைகள் உள்ளிட்டவை முறைப்படி அகற்றப்பட வேண்டும். மழைநீா் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது அவசியம். மழைக்கு முன்னதாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கே.வி.விஜய்தாமு (ராயபுரம்), எம்.ஆா்.பல்லவி (திரு.வி.க. நகா்), மண்டல கண்காணிப்பு அலுவலா்கள் ஆஷாஅஜித், பி.கணேசன், வட்டாரத் துணை ஆணையா்கள் ஸ்வேதா சுமன், எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.