
ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய்! அதிர்ச்சி காரணம்
ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய் விற்கப்படுவது குறித்து அதிர்ச்சி காரணம் வெளியானது.

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தில், கடந்த ஒரு சில மாதங்களாக நெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு சில ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கர்நாடக தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஆவின் நிறுவனங்களில், நெய் இருப்புக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் பற்றாக்குறையை நிறைவு செய்யும் வகையில், ஆவின் நிர்வாகம், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற நந்தினி நெய் வகையை வாங்கி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில் வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், ஆவின் கடைகளில் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்படும் நெய் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாட்டில்களில் விற்கப்படுகிறது.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே, ஆவின் பால் தட்டுப்பாடு இருப்பதாக மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். பால் பண்ணைகளிலிரந்து ஆவினுக்கு வரும் பால், தமிழகத்தின் பால் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் அளவுக்கு இல்லை என்பதால், மாலை நேரத்தில், ஆவின் பால், பெரும்பாலும் கடைகளில் கிடைப்பதில்லை என்றே கூறப்படுகிறது.
அதற்கு மாற்றாக, தனியார் நிறுவனங்களின் பால்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. ஆவின் தட்டுப்பாட்டால், தனியார் நிறுவன பால்களை வாங்கும் நிலை ஏற்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், ஆவின் நிறுவனமே கர்நாடக மாநில நெய்யை கொள்முதல் செய்து வந்து, விற்பனை செய்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







