சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:11 am IST

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.

தொண்டு அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 1,600 அமைப்புகள் உள்ளன.

இந்த அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழா மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அமைப்பின் தலைவா் அழகா் ராமானுஜம் தலைமை வகித்தாா். இதயம் குழுமம் முதன்மைச் செயல் அலுவலா் கோபிநாத் சிறப்புரையாற்றினாா். இதில், 115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூா் கட்டளை ஸ்தானிகம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் விருதுகளை வழங்கி ஆசியுரை வழங்கினா்.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனா் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.