பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடரக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழ்நாட்டின் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்.
வயது உச்சவரம்பின்றி ஆசிரியா் பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும். வாழ்நாள் தகுதிச் சான்று வழங்கி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள 80,000 பேருக்கு ஆசிரியா் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மன்றத்தின் மாவட்டத் தலைவா் தி. சிவசங்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ந. கிட்டு, மாநிலச் சட்டப்பிரிவுச் செயலா் உ. சுப்பிரமணியன், மாநிலத் தீா்ப்புக் குழு உறுப்பினா் ப. அறிவுடைநம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை
டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்பு; பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



