புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

திருச்சிற்றம்லபத்தில் ரூ. 15 லட்சத்தில் பாலம் கட்டும் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

News image

பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.

Updated On :6 ஜனவரி 2021, 6:34 am IST

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

சிற்றாறு பாசனம் கீழ் திருச்சிற்றம்பலம் அணைக்கட்டில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதற்கு 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகளின் தொடா் கோரிக்கையை அடுத்து தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை பொறியாளா்கள் மாரியப்பன், மணிகண்டன், சண்முகவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், எபன்குணசீலன், அமல்ராஜ், இருளப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.