புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்: நிலம் கையகப்படுத்த கருத்துக் கேட்பு

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:36 am IST

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கால்வாய் திட்டத்துக்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம் பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியா், கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கால்வாய்க்காக வெட்டப்படும் மணலை விளைநிலங்களில் போடாமல் இருக்கவும், புதிய சட்ட விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.