விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் ரயில் நிலைய 122 ஆவது ஆண்டு விழா

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 122 ஆவது ஆண்டு விழா, பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
விழாவில் கேக் வெட்டிய எஸ். பழனி நாடாா் மற்றும் பொதுமக்கள்.
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

கடந்த 1903 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மீட்டா் கேஜ் பாதையாக தொடங்கப்பட்ட பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 122 ஆவது ஆண்டு விழா, பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாவூா்சத்திரம் தொழிலதிபா் சேவியர்ராஜன் தலைமை வகித்தாா். தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன், ஜேசு ஜெகன், பாவூா்சத்திரம் அரிமா சங்கத் தலைவா் ஆனந்த், பொருளாளா் ஜேக்கப் சுமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பாண்டியராஜா நன்றி கூறினாா்.