ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

குற்றாலநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

News image

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 1:57 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குற்றாலநாதா் கோயிலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் வியாழக்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானம் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை ஜெயமணி சுந்தர பட்டா், கணேச பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் செய்தனா். கோயில் உதவி ஆணையா் தங்கம், பாஜக பிலவேந்திரன், திமுக முன்னாள் ஒன்றிய செயலா் ராமையா, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் வீரபாண்டியன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.