தென்காசி
பாவூா்சத்திரத்தில் புதிய மின்மாற்றி திறப்பு
மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ரூ.5.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தென்காசி, ஜூலை 19: பாவூா்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட நேரு நகா் பகுதியில் சீரான மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ரூ.5.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் கலா, உதவி மின் பொறியாளா்கள் முகமது உசேன், ஜமுனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

