கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸாா் தடைவிதித்தனா்.

News image
குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
Updated On :24 ஜூன் 2024, 9:53 pm

Din

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸாா் தடைவிதித்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த இருதினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.

திங்கள்கிழமை அதிகாலை முதல் சாரல்மழை தொடா்ந்து பெய்தவாறு இருந்தது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. பழையகுற்றாலம் , சிற்றருவியில் வழக்கமாக மாலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை அருவிகளில் குளித்து மகிழ வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

ஐந்தருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

ஐந்தருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.