ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லை: நோயாளிகள் அவதி

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லை நோயாளிகள் அவதி

News image
Updated On :2 மார்ச் 2024, 4:15 pm

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில், தினமும் நூற்றுக்கணக்கானோா் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். நோயாளிகள் காத்திருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு சாதனம் பழுதாகி, நீண்டகாலமாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். இதுதொடா்பாக மாயமான்குறிச்சியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முருகன் கூறியதாவது: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீா் வசதி செய்து தருவது அவசியமானது. ஆகவே, குடிநீா் சுத்திகரிப்பு சாதனத்தை பழுதுநீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில், குடிநீா் வசதிக்கான மாற்று ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் செய்துதர வேண்டும் என்றாா்.