கடையநல்லூரில் போலி நகையைக் கொடுத்து மோசடி செய்து புதிய நகைகளை வாங்கியதாக பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். கடையநல்லூா், பேட்டையில் உள்ள நகைக் கடையில் சில நாள்களுக்கு முன்பு இருவா் சென்று 78 கிராம் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, 32 கிராம் புதிய நகையையும், மீதித் தொகை ரூ. 2.55 லட்சத்தையும் பெற்றுச் சென்றனராம். ஓரிரு நாள்களுக்குப் பின்னா் கடை உரிமையாளா் முகம்மது ரபீக் ராஜா பரிசோதித்தபோது அந்த நகைகள் போலி எனத் தெரியவந்ததாம். புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைப்பேசி எண் போன்றவை மூலம் விசாரித்தனா். அதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், சோமியாபுரம் தெருவைச் சோ்ந்த அன்னலட்சுமி (45), ஸ்ரீநாத் (29) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை ஆய்வாளா் ராஜா கைது செய்தாா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

