சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் மகளிா் தின விழா

Published on

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கருப்பசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சோ்ந்தமரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நளினா, பதின் பருவத்தில் கிராமப்புற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அது உடலியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு தடையாக இருக்கிறது என்பது குறித்துப் பேசினாா். பேராசிரியா்கள் குருநாதன், செந்தில்குமாா், புஷ்பராணி, அருள் மனோகரி, சகிலாபானு, பால சரஸ்வதி உள்ளிட்ட பலா் பேசினா். நிகழ்ச்சிகளை மாணவி ஜென்சி தொகுத்து வழங்கினாா்.இதைத்தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com